Sep 1, 2026
Thisaigal NewsYouTube
பூடி மடானி எரிபொருள் ஒதுக்கீடு மீண்டும் 300 லிட்டராக உயர்வு!
தற்போதைய செய்திகள்

பூடி மடானி எரிபொருள் ஒதுக்கீடு மீண்டும் 300 லிட்டராக உயர்வு!

Share:

பூடி மடானி திட்டத்தின் கீழ் மாதாந்திர அடிப்படை எரிபொருள் ஒதுக்கீடு இன்று முதல் 200 லிட்டரில் இருந்து 300 லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சு வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த அதிகரிப்பு பூடி95 ரோன் 95 பெட்ரோல் மற்றும் பூடி டீசல் ஆகிய இரு திட்டங்களுக்கும் பொருந்தும்.

மானிய விலையில் ரோன்95 ஒரு லிட்டர் 1 ரிங்கிட் 99 சென் என்ற நிலையிலும், டீசல் 2 ரிங்கிட் 10 சென் என்ற நிலையிலும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும்.

தனியார் டீசல் பிக்கப் டிரக்குகள் மற்றும் ஜீப் உரிமையாளர்களுக்கு மாதாந்திர ஒதுக்கீடு 400 லிட்டர் வரை அதிகரிக்கப்படுகிறது. ஏற்கனவே கூடுதல் 100 லிட்டருக்கு அனுமதி பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.

புதிய விண்ணப்பங்களை பூடி மடானி இணையதளம் வழியாகச் செய்யலாம்.

இந்த மாற்றத்தால், பூடி95 மூலம் சுமார் 1 கோடியே 60 லட்சம் பயனர்கள் மானிய விலையில் பூடி95 பெறுகின்றனர். மேலும் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் மானிய டீசலுக்கும் தகுதி பெற்றுள்ளனர்.

இந்த அறிவிப்பு பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், கடந்த ஞாயிற்றுக்கிழமை தேசிய தின உரையில் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து அமலுக்கு வந்துள்ளது.

Related News

நேபாள வெள்ளம்: மலேசியக் குழுவுடன் தொடர்புடைய நபர் குறித்து வெளியான தகவலை வெளியுறவு அமைச்சு விசாரிக்கிறது

நேபாள வெள்ளம்: மலேசியக் குழுவுடன் தொடர்புடைய நபர் குறித்து வெளியான தகவலை வெளியுறவு அமைச்சு விசாரிக்கிறது

எல்.பி.டி - யில் 11 வாகனங்கள் பயங்கர விபத்து — 4 பேர் பலி

எல்.பி.டி - யில் 11 வாகனங்கள் பயங்கர விபத்து — 4 பேர் பலி

புதிய தலைமுறை மைகாட்டுக்கு மாறுகிறது ஜேபிஎன்.— செப்டம்பர் 7 வரை அச்சிடும் சேவை பாதிப்பு

புதிய தலைமுறை மைகாட்டுக்கு மாறுகிறது ஜேபிஎன்.— செப்டம்பர் 7 வரை அச்சிடும் சேவை பாதிப்பு

மைகாட் அச்சிடும் சேவைகள் செப்டம்பர் 7 வரையில் தற்காலிக நிறுத்தம் / மேம்படுத்தப்பட்ட புதிய அட்டைக்குக் காத்திருக்குமாறு ஜேபிஎன் அறிவுறுத்து

மைகாட் அச்சிடும் சேவைகள் செப்டம்பர் 7 வரையில் தற்காலிக நிறுத்தம் / மேம்படுத்தப்பட்ட புதிய அட்டைக்குக் காத்திருக்குமாறு ஜேபிஎன் அறிவுறுத்து

அடுத்த 6 மாதங்களில் 2 லட்சம் வங்காள தேசத் தொழிலாளர்களை மலேசியாவில் பணியமர்த்தத் திட்டம்

அடுத்த 6 மாதங்களில் 2 லட்சம் வங்காள தேசத் தொழிலாளர்களை மலேசியாவில் பணியமர்த்தத் திட்டம்

செதாபாக்கில் 22-ஆவது மாடியில் இருந்து விழுந்த 18 வயது கல்லூரி மாணவர் உயிரிழப்பு

செதாபாக்கில் 22-ஆவது மாடியில் இருந்து விழுந்த 18 வயது கல்லூரி மாணவர் உயிரிழப்பு