Sep 1, 2026
Thisaigal NewsYouTube
புதிய தலைமுறை மைகாட்டுக்கு மாறுகிறது ஜேபிஎன்.— செப்டம்பர் 7 வரை அச்சிடும் சேவை பாதிப்பு
தற்போதைய செய்திகள்

புதிய தலைமுறை மைகாட்டுக்கு மாறுகிறது ஜேபிஎன்.— செப்டம்பர் 7 வரை அச்சிடும் சேவை பாதிப்பு

Share:

தேசியப் பதிவுத் துறையான ஜேபிஎன், தற்போதைய மைகாட் அட்டையிலிருந்து புதிய தலைமுறை மைகாட்டுக்கு மாறுவதால், மைகாட் அச்சிடும் சேவையில் இன்று முதல் தற்காலிக இடையூறு ஏற்பட்டுள்ளது.

இந்த இடையூறு செப்டம்பர் 1 முதல் 7ஆம் தேதி வரை நீடிக்கும் என்று ஜேபிஎன் தெரிவித்துள்ளது.

அவசரத் தேவையில்லாதவர்கள், இந்த காலகட்டத்தில் மைகாட்டை புதுப்பிப்பது அல்லது மாற்றுவதற்கான நடவடிக்கைகளை தள்ளிப்போடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, முதல் முறையாக மைகாட்டுக்கு விண்ணப்பிக்கவுள்ள பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள், விண்ணப்பத்தை சற்று தாமதப்படுத்துமாறு ஜேபிஎன் அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக 12 வயதை எட்டும் குழந்தைகள், புதிய தலைமுறை மைகாட் அறிமுகமான பின்னர் அதனைப் பெறும் வகையில், தற்போது விண்ணப்பிப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மாற்றக் காலத்தில் பொதுமக்கள் பொறுமையுடனும் ஒத்துழைப்புடனும் செயல்பட வேண்டும் என்று ஜேபிஎன். கேட்டுக்கொண்டதுடன், ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு மன்னிப்பும் தெரிவித்துள்ளது.

புதிய தலைமுறை மைகாட் தொடர்பான அடுத்தகட்ட தகவல்களுக்கு ஜேபிஎன். அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related News

நேபாள வெள்ளம்: மலேசியக் குழுவுடன் தொடர்புடைய நபர் குறித்து வெளியான தகவலை வெளியுறவு அமைச்சு விசாரிக்கிறது

நேபாள வெள்ளம்: மலேசியக் குழுவுடன் தொடர்புடைய நபர் குறித்து வெளியான தகவலை வெளியுறவு அமைச்சு விசாரிக்கிறது

எல்.பி.டி - யில் 11 வாகனங்கள் பயங்கர விபத்து — 4 பேர் பலி

எல்.பி.டி - யில் 11 வாகனங்கள் பயங்கர விபத்து — 4 பேர் பலி

பூடி மடானி எரிபொருள் ஒதுக்கீடு மீண்டும் 300 லிட்டராக உயர்வு!

பூடி மடானி எரிபொருள் ஒதுக்கீடு மீண்டும் 300 லிட்டராக உயர்வு!

மைகாட் அச்சிடும் சேவைகள் செப்டம்பர் 7 வரையில் தற்காலிக நிறுத்தம் / மேம்படுத்தப்பட்ட புதிய அட்டைக்குக் காத்திருக்குமாறு ஜேபிஎன் அறிவுறுத்து

மைகாட் அச்சிடும் சேவைகள் செப்டம்பர் 7 வரையில் தற்காலிக நிறுத்தம் / மேம்படுத்தப்பட்ட புதிய அட்டைக்குக் காத்திருக்குமாறு ஜேபிஎன் அறிவுறுத்து

அடுத்த 6 மாதங்களில் 2 லட்சம் வங்காள தேசத் தொழிலாளர்களை மலேசியாவில் பணியமர்த்தத் திட்டம்

அடுத்த 6 மாதங்களில் 2 லட்சம் வங்காள தேசத் தொழிலாளர்களை மலேசியாவில் பணியமர்த்தத் திட்டம்

செதாபாக்கில் 22-ஆவது மாடியில் இருந்து விழுந்த 18 வயது கல்லூரி மாணவர் உயிரிழப்பு

செதாபாக்கில் 22-ஆவது மாடியில் இருந்து விழுந்த 18 வயது கல்லூரி மாணவர் உயிரிழப்பு