வரும் தேசிய தினத்தை முன்னிட்டு கூட்டரசு அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்துகின்ற சின்னத்தையும், கருப்பொருளையும் கெடா மாநில அரசாங்கம் பயன்படுத்தும் என்று மாநில மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூர் தெரிவித்துள்ளார்.
கூட்டரசு அரசாங்கம் வெளியிடும் சின்னத்தையும், சுலோகத்தையும் பயன்படுத்துற்கு ஒப்புக்கொண்டுள்ள கிளந்தான், திரெங்கானு மாநிலத்திற்கு அடுத்து, மூன்றாவது எதிர்க்கட்சி மாநிலமாக கெடா விளங்குகிறது.
பெரிக்காத்தான் நேஷனலின் நான்கு மாநிலங்கள் மெர்டேக்காவையொட்டி சொந்த சின்னத்தையும், சுலோகத்தையும் பயன்படுத்தக்கூடிய சாத்தியம் இருப்பதாக அதன் இளைஞர் பிரிவுத் தலைவர் அஹ்மத் ஃபத்லி ஷாரி கூறி வந்த வேளையில் இவ்விவகாரத்தில் கெடா மாநிலம் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.

Related News

மலேசியக் கல்வி அமைச்சிற்குப் பிரதமர் அதிரடி உத்தரவு: பாலர் பள்ளி மற்றும் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முன்னேற்பாடுகளைத் துரிதப்படுத்துக

லாஹாட் டத்து: கழிவுநீர்க் குழாய் பள்ளத்தில் பாய்ந்தது பிக்கப் வாகனம் - ஒருவர் பலி; மற்றொருவர் காயம்

நகர்ப்புற மறுமேம்பாட்டு சட்ட மசோதா வாபஸ்: அமைச்சரவை அதிரடி முடிவு

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி


