May 28, 2026
Thisaigal NewsYouTube
பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் மீண்டும் கோலாலாம்பூர் சேவையைத் தொடங்கிறது
தற்போதைய செய்திகள்

பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் மீண்டும் கோலாலாம்பூர் சேவையைத் தொடங்கிறது

Share:

கோலாலம்பூர், மார்ச்.26-

உலகில் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ், மீண்டும் கோலாலம்பூருக்கான தனது விமானச் சேவையை தொடங்கவிருக்கிறது.

லண்டன் ஹீத்ரோ அனைத்துலக விமான நிலையத்திற்கும், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கும் இடையிலான பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமானச் சேவை வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது என்று மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் தெரிவித்துள்ளது.

நெடுந்தூர பயணத்திற்கான Boeing 787-9 ரக விமானங்களை பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் பயன்படுத்தவிருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கோலாலம்பூருக்கான தனது விமானச் சேவையை தொடங்கவிருக்கும் பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் வருகை, ஒரு நல்வரவாகும் என்று மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின் வியூகப்பிரிவு தலைமை நிர்வாகி மெகாட் ஆர்டியான் வீரா முகமட் அமினுடின் தெரிவித்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு உலக முழுவதும் கோவிட் 19 – தாக்குதலினால் லண்டனுக்கும், கோலாலம்பூருக்கும் இடையிலான தனது விமானச் சேவையை பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் நிறுத்தியது.

கோலாலம்பூருக்கும், லண்டனுக்கும் இடையிலான வழித்தடம் வியூகம் நிறைந்தது என்பதால் அந்த வழித்தடத்தை தொடர்வதற்கு பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் மீண்டும் முற்பட்டுள்ளதாக மெகாட் ஆர்டியான் தெரிவித்தார்.

Related News

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்