கடந்த மே மாதத்தில், பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக இளைஞன் ஒருவன் Muar Sesyens நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.
18 வயது அந்த இளைஞன் நீதிபதி Abu Bakar Manat முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டார்.
குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் சிறை மற்றும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஒரு பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 14 (a) மற்றும் 14 (b) ஆகிய பிரிவுகளின் கீழ் அவ்விளைஞன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
கடந்த மே 10 ஆம் தேதி மாலை 3 மணியளவில் Johor, Jalan Sisi - யில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் 13 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.








