May 6, 2026
Thisaigal NewsYouTube
இவ்வாண்டில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டவிரோதக் குடியேறிகள் பிடிபட்டனர்
தற்போதைய செய்திகள்

இவ்வாண்டில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டவிரோதக் குடியேறிகள் பிடிபட்டனர்

Share:

ஷா ஆலாம், டிசம்பர்.27-

மலேசிய குடிநுழைவுத்துறை இவ்வாண்டு நாடு தழுவிய நிலையில் நடத்திய சோதனை நடவடிக்கைகளில் 90 ஆயிரத்திற்கும் மேறபட்ட சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டதாக அறிவித்துள்ளது.

இவ்வாண்டில் மொத்தம் 13 ஆயிரத்து 678 சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி வரை 2 லட்சத்து 35 ஆயிரத்து 343 அந்நிய நாட்டவர்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அதன் துணைத் தலைமை இயக்குநர் டத்தோ லொக்மான் எஃப்பெண்டி ரம்லி தெரிவித்தார்.

சோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில் 5 ஆயிரத்து 294 பேர், அகதிகளுக்கான ஐ.நா. தூதரகத்தின் அடையாள அட்டையை வைத்திருந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

இலாகாவின் சோதனை நடவடிக்கைகளில் 50 ஆயிரத்து 472 பேர் பிடிபட்டுள்ள வேளையில் 41 ஆயிரத்து 357 பேர் நாட்டின் பிரதான நுழைவாயில்களில் கைது செய்யப்பட்டனர் என்று டத்தோ லொக்மான் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்