Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

வணிக வளாகங்களிலும் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் பாதுகாப்பு கடுமையாக்கப்பட வேண்டும்

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்.9-

ஷா ஆலாமில் உள்ள செத்தியா ஆலாம் வணிக வளாகத்தில் நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள வணிக வளாகங்களிலும் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் பாதுகாப்பைக் கடுமையாக்க தேசிய காவல்துறைத் தலைவர் ரசாருடின் ஹுசேன் உத்தரவிட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான எந்தவொரு நடவடிக்கை குறித்து காவல் துறை அதிகாரிகளும் பாதுகாப்பு காவலர்களும் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நேற்றைய சம்பவத்தைப் பொறுத்தவரை, சிலாங்கூர் காவல் துறையினர் சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளனர். அவரைக் கண்டுபிடிப்பதற்காகப் பல்வேறு காவல் துறை பிரிவுகள் களத்தில் உள்ளன. அண்டை மாநிலங்களில் உள்ள காவல் துறையினருக்கும், எல்லைகளில் உள்ள அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பு முதன்மையானது என்றும், சந்தேக நபரை நீதியின் முன் நிறுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் உறுதியளித்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மக்களிடையே கவலைகள் எழுந்துள்ளதை தாங்கள் புரிந்து கொள்வதாகவும், ஆனால் அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடிய எந்தவோர் ஊகங்களையும் பொதுமக்கள் வெளியிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Related News

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

சபா கடல் எல்லை உரிமை: பிலிப்பைன்ஸுக்கு எதிராக ஐநா-வில் மலேசியா புதிய புகார்

சபா கடல் எல்லை உரிமை: பிலிப்பைன்ஸுக்கு எதிராக ஐநா-வில் மலேசியா புதிய புகார்

தாமான் டானாவ் கோத்தா கடைத் தொகுதியில் பயங்கர தீ விபத்து: மேல் தளம் முற்றிலும் எரிந்து சாம்பல்

தாமான் டானாவ் கோத்தா கடைத் தொகுதியில் பயங்கர தீ விபத்து: மேல் தளம் முற்றிலும் எரிந்து சாம்பல்