கோலாலம்பூர், ஸ்தாபாக், தாமான் டானாவ் கோத்தாவில் உள்ள ஒரு கடைத் தொகுதியின் மூன்றாவது மாடியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், அந்தத் தளம் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
இன்று காலை 11.29 மணியளவில் தீ விபத்து குறித்து அவசர அழைப்பு வந்ததாகக் கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், கடுமையாகப் போராடி மதியம் 12.10 மணியளவில் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் கட்டிடத்தின் மேல் தளம் முற்றிலும் சேதமடைந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ யாருக்கும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான உண்மையான காரணம் குறித்து தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.








