பக்காத்தான் ராக்யாட்டில் ஓர் உறுப்புக் கட்சியாக இருந்த பாஸ், ஏன் திடீரென்று அந்த கூட்டணியிலிருந்து விலகியது என்பதற்கான உண்மையான காரணத்தை இன்று அம்பலப்படுத்தப் போவதாக விவசாயத்துறை அமைச்சரும், அமானா கட்சியின் தலைவருமான முகமட் சாபு அறிவித்துள்ளார்.
இஸ்லாத்தின் குற்றவியல் சட்டமான ஹுடுட் அமலாக்கத்தை டிஏபி கடுமையாக எதிர்த்து வந்ததால், பக்காத்தான் ராக்யாட் கூட்டணியிலிருந்து தாங்கள் விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் நீலிக் கண்ணீர் வடித்துக்கொண்டு இருக்கிறார். ஆனால், அது உண்மையான காரணம் அல்ல என்பதை இன்று வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, பாஸ் கட்சித் தலைவர்களின் முகத்திரையை அகற்றப் போவதாக பாஸ் கட்சியின் முன்னாள் பொறுப்பாளரான முகமட் சாபு குறிப்பிட்டார். பாஸ் கட்சித் தலைவரின் உண்மைக்கு புறம்பான தகவல்களை கேட்டு, இனியும் தாம் சகித்துக்கொள்ள இயலாது என்று முகமட் சாபு சூளுரைத்துள்ளார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


