நாட்டின் முன்னணி சுற்றுலா மலை வாசஸ்தலமான கேமரன்மலையில் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஓர் இந்தியப் பிரஜை கடந்த ஒரு வார காலமாக காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
44 வயது நந்த சுரேஷ் நட்கார்னி என்ற அந்த இந்தியப் பிரஜை கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி கேமரன் மலையில் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அன்றைய தினம் தாம் தங்கியிருந்த தானா ராத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலிலிருந்து வெளியேறி காலை 9. 00 மணியளவில் குனோங் ஜாசார் மலைப்பகுதியை நோக்கி மலையேறும் நடவடிக்கையை தொடங்கியதாக கூறப்படுகிறது.
முன்னதாக, அந்த இந்தியப் பிரஜை, கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி அந்த ஹோட்டலில் தன்னை பதிவு செய்து கொண்டு தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் செப்டம்பர் 24 ஆம் தேதி அந்த ஹோட்டலை விட்டு வெளியேறுவதற்கு அட்டவணையிடப்பட்டு இருந்தது. ஆனால், ஒரு வார காலமாகியும் அவர் ஹோட்டலுக்கு திரும்பவில்லை. வேறு எங்கும் தங்கியிருப்தற்கான தகவல்களும் இல்லை.
இந்நிலையில் அந்த இந்தியப் பிரஜை காணாதது குறித்து தானா ராத்தா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. அவரை தேடும் பணியில் போலீஸ் கலாட் படையினர், தீயணைப்பு,மீட்பு வீரர்கள், பொது தற்காப்பு படையினர் தன்னார்வாலர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


