May 6, 2026
Thisaigal NewsYouTube
கடற்படை உயர் அதிகாரி மீதான ஊழல் விசாரணை: 21 வங்கிக் கணக்குகள், விடுதிகள் முடக்கம்
தற்போதைய செய்திகள்

கடற்படை உயர் அதிகாரி மீதான ஊழல் விசாரணை: 21 வங்கிக் கணக்குகள், விடுதிகள் முடக்கம்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.26-

மலேசியக் கடற்படை உயர் அதிகாரி ஒருவர் மற்றும் அவரது நண்பர்களுக்குச் சொந்தமான நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட ஊழல் புகாரைத் தொடர்ந்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

சுமார் 7 லட்சம் ரிங்கிட் இருப்பு கொண்ட 7 நிறுவனக் கணக்குகள் மற்றும் 14 தனிநபர் வங்கிக் கணக்குகளை எஸ்பிஆர்எம் முடக்கியுள்ளது.

அந்த உயர் அதிகாரிக்குச் சொந்தமான சுமார் 2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள இரண்டு ஹோட்டல்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரி 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை தனது பணியிடத்தில் ஒப்பந்தங்களைப் பெறுவதற்காகத் தனது நெருக்கமானவர்களின் நிறுவனங்களைப் பரிந்துரைத்து நியமித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அந்த அதிகாரியின் தனிப்பட்ட கணக்குகள் மற்றும் விடுதி நிறுவனக் கணக்குகளில் சுமார் 2 மில்லியன் வெள்ளி மதிப்பிலான சந்தேகத்திற்குரிய வைப்புத் தொகை செலுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக அந்த உயர் அதிகாரி மற்றும் ஒரு நிறுவன இயக்குநர் வரும் ஜனவரி 29 வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்