Mar 12, 2026
Thisaigal NewsYouTube
கடற்படை உயர் அதிகாரி மீதான ஊழல் விசாரணை: 21 வங்கிக் கணக்குகள், விடுதிகள் முடக்கம்
தற்போதைய செய்திகள்

கடற்படை உயர் அதிகாரி மீதான ஊழல் விசாரணை: 21 வங்கிக் கணக்குகள், விடுதிகள் முடக்கம்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.26-

மலேசியக் கடற்படை உயர் அதிகாரி ஒருவர் மற்றும் அவரது நண்பர்களுக்குச் சொந்தமான நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட ஊழல் புகாரைத் தொடர்ந்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

சுமார் 7 லட்சம் ரிங்கிட் இருப்பு கொண்ட 7 நிறுவனக் கணக்குகள் மற்றும் 14 தனிநபர் வங்கிக் கணக்குகளை எஸ்பிஆர்எம் முடக்கியுள்ளது.

அந்த உயர் அதிகாரிக்குச் சொந்தமான சுமார் 2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள இரண்டு ஹோட்டல்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரி 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை தனது பணியிடத்தில் ஒப்பந்தங்களைப் பெறுவதற்காகத் தனது நெருக்கமானவர்களின் நிறுவனங்களைப் பரிந்துரைத்து நியமித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அந்த அதிகாரியின் தனிப்பட்ட கணக்குகள் மற்றும் விடுதி நிறுவனக் கணக்குகளில் சுமார் 2 மில்லியன் வெள்ளி மதிப்பிலான சந்தேகத்திற்குரிய வைப்புத் தொகை செலுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக அந்த உயர் அதிகாரி மற்றும் ஒரு நிறுவன இயக்குநர் வரும் ஜனவரி 29 வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!