கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி ஜெராண்டுட் பகுதியில் உள்ள தங்க நகைக் கடையில் நடந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு ஆண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
23 மற்றும் 63 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரும் கடந்த திங்கட்கிழமை மாலை 4 மணியளவில், கோலாலம்பூர், சௌ கிட் பகுதியில் உள்ள இரண்டு வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளையில், சம்பவத்தின் போது திருடப்பட்டதாகக் கருதப்படும், சுமார் 26 ஆயிரம் ரிங்கிட் மதிப்புடைய தங்கக் காப்புகள் மற்றும் மோதிரங்களை தற்போது போலீசார் மீட்டுள்ளதாக ஜெராண்டுட் இடைக்கால போலீஸ் தலைவர் அர்ஷாட் அயூப் தெரிவித்துள்ளார்.
மேலும், விசாரணைகளுக்கு உதவும் வகையில், ஒரு இருசக்கர வாகனம், செல்போன், வங்கிக் அட்டைகள் மற்றும் ஆடைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வழக்கு, குற்றவியல் சட்டம் பிரிவு 380-இன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.








