பட்டாசுகளைக் கொளுத்தி விளையாடும் சிறார்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஆபத்து மிகுந்த இச்செயல்களில் ஈடுபடுவதற்குப் பிள்ளைகளை அனுமதிக்கும் அல்லது அவர்களைக் கவனிக்காமல் அலட்சியமாக இருக்கும் பெற்றோர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று மகளிர் , குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் ஐமான் அதிராஹ் சபு தெரிவித்துள்ளார்.
சிறார்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் பட்டாசு வெடிகளைப் பயன்படுத்த பெற்றோர்கள் ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது என்பதுடன் ஆபத்து குறைவான வாணவேடிகளைச் சிறார்கள் கையாளும் போது பெற்றோர்கள் அணுக்கமாக கண்காணிக்க வேண்டும் என்று துணை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
பட்டாசுப் பொருட்களின் விற்பனைக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தாலும், சிறுவர்களைக் கண்காணிப்பது பெற்றோர்களின் கடமையாகும் என்று ஐமான் அதிராஹ் சபு நினைவுறுத்தினார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


