Jun 6, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

Share:

தலைமறைவாகியுள்ள நிதியாளர் லோ தேக் ஜோ, ரகசிய சந்திப்புகளுக்காக, மலேசியாவிற்கு திரும்பியதாக கூறப்படும் தகவல்கள் குறித்து புக்கிட் அமான் விசாரணை நடத்தவுள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவர்டத்தோ ஸ்ரீ முகமது காலித் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

“ஜோ லோ” என அறியப்படும் லோ தேக் ஜோ, மலேசியாவிற்கு திரும்பி, சில ரகசியக் கூட்டங்களில் கலந்து கொண்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தகவல்கள் உண்மையா? இல்லையா? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் கூட, அதுகுறித்து மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என்று இன்று சனிக்கிழமை நடைபெற்ற பெங்காமான் போலீஸ் ஆட்டிசம் மையத்தின் ஆட்டிசம் நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

1எம்டிபி மோசடி வழக்கில் மூளையாகச் செயல்பட்ட முக்கிய நபராகக் கருதப்படும் ஜோ லோ, தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் பொது மன்னிப்புக் கோரி தாக்கல் செய்துள்ள மனு, மலேசியாவில் அரசியல் தலைவர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜோ லோவிற்கு மன்னிப்பு வழங்கக் கூடாது என்று 1எம்டிபி விவகாரத்தில் தொடர்புடைய சில முக்கியத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

மஞ்சோங்கில் நடந்த ஆயுதக் கொள்ளை - மூன்று வெளிநாட்டினருக்கு போலீஸ் வலைவீச்சு

மஞ்சோங்கில் நடந்த ஆயுதக் கொள்ளை - மூன்று வெளிநாட்டினருக்கு போலீஸ் வலைவீச்சு