May 16, 2026
Thisaigal NewsYouTube
பங்கோர் படகு விபத்து: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு
தற்போதைய செய்திகள்

பங்கோர் படகு விபத்து: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

Share:

பங்கோர் தீவு கடற்பகுதியில் இந்தோனேசிய குடியேறிகள் சென்ற படகு கவிழ்ந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மேலும் நான்கு சடலங்கள் மீட்கப்பட்டதாக மலேசிய கடலோர அமலாக்க நிறுவனமான எம்.எம்.இ.ஏ தெரிவித்துள்ளது.

அவற்றில் மூன்று ஆண்களின் சடலங்கள் புலாவ் புலோவின் தென்மேற்கு கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும், ஒருவரின் சடலம் புலாவ் சங்கா கெச்சில்லின் தென்மேற்கு பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், இந்த விபத்தில் இதுவரை மொத்தம் 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

7-வது நாளாக மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதற்கு மேல் உடல்கள் கண்டறியப்படவில்லை எனில் தேடுதல் பணியானது அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்படும் என எம்.எம்.இ.ஏ பேராக் மாநில இயக்குநர் சுக்ரி கோதோப் தெரிவித்துள்ளார்.

Related News