May 21, 2026
Thisaigal NewsYouTube
துபாய் நகர்வு 8 போலீஸ் புகார்கள்
தற்போதைய செய்திகள்

துபாய் நகர்வு 8 போலீஸ் புகார்கள்

Share:

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு ஐக்கிய அரபு சிற்றுரசில் துபாய் நகர்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் எட்டு போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அல்லவுடீன் அப்துல் மஜிட் தெரிவித்துள்ளார்.

இப்புகார்கள் யாவும் புத்ராஜெயா, செராஸ், டாங் வாங்கி ஆகிய மாவட்ட போலீஸ் நிலையங்களிலிருந்து பெறபட்டுள்ளதாக அல்லவுடீன் குறிப்பிட்டார்.

இப்புகார்கள் தொடர்பில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்ற புலனாய்வுத்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Related News