Mar 21, 2026
Thisaigal NewsYouTube
காரை எட்டி உதைத்து அடாவடித்தனம்: 20 நபர்களைப் போலீஸ் தேடுகிறது
தற்போதைய செய்திகள்

காரை எட்டி உதைத்து அடாவடித்தனம்: 20 நபர்களைப் போலீஸ் தேடுகிறது

Share:

செர்டாங், செப்டம்பர்.29-

பூச்சோங், பத்து 13, டோல் சாவடி அருகில் பெரோடுவா மைவி கார் ஒன்றைச் சுற்றி வளைத்துக் கொண்டு, அக்காரை எட்டி உதைத்துக் கொண்டும், கார் கண்ணாடியைப் பலம் கொண்டு கையால் குத்தியவாறும் அடாவடித்தனம் புரிந்த சுமார் 20 நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

மோட்டர் சைக்கிளில் பயணித்தவாறு இளைஞர் கும்பல் நிகழ்த்திய இந்த அராஜகச் செயல் நேற்று காலை அதிகாலை 4 மணியளவில் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைளத்தளங்களில் வைரலாகியுள்ள வேளையில் பாதிக்கப்பட்ட 52 வயதுடைய நபர், இது குறித்து அன்றைய தினம் இரவு 10 மணியளவில் போலீசில் புகார் செய்து இருப்பதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஃபாரிட் அஹ்மாட் தெரிவித்தார்.

இதர வாகனமோட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட அந்த கும்பலைச் சேர்ந்தவர்களைப் போலீசார் அடையாளம் கண்டு வருகின்றனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று ஃபாரிட் அஹ்மாட் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து