Dec 3, 2025
Thisaigal NewsYouTube
காரை எட்டி உதைத்து அடாவடித்தனம்: 20 நபர்களைப் போலீஸ் தேடுகிறது
தற்போதைய செய்திகள்

காரை எட்டி உதைத்து அடாவடித்தனம்: 20 நபர்களைப் போலீஸ் தேடுகிறது

Share:

செர்டாங், செப்டம்பர்.29-

பூச்சோங், பத்து 13, டோல் சாவடி அருகில் பெரோடுவா மைவி கார் ஒன்றைச் சுற்றி வளைத்துக் கொண்டு, அக்காரை எட்டி உதைத்துக் கொண்டும், கார் கண்ணாடியைப் பலம் கொண்டு கையால் குத்தியவாறும் அடாவடித்தனம் புரிந்த சுமார் 20 நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

மோட்டர் சைக்கிளில் பயணித்தவாறு இளைஞர் கும்பல் நிகழ்த்திய இந்த அராஜகச் செயல் நேற்று காலை அதிகாலை 4 மணியளவில் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைளத்தளங்களில் வைரலாகியுள்ள வேளையில் பாதிக்கப்பட்ட 52 வயதுடைய நபர், இது குறித்து அன்றைய தினம் இரவு 10 மணியளவில் போலீசில் புகார் செய்து இருப்பதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஃபாரிட் அஹ்மாட் தெரிவித்தார்.

இதர வாகனமோட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட அந்த கும்பலைச் சேர்ந்தவர்களைப் போலீசார் அடையாளம் கண்டு வருகின்றனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று ஃபாரிட் அஹ்மாட் குறிப்பிட்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்