Dec 15, 2025
Thisaigal NewsYouTube
 "சாலைத் தடுப்பான்கள் அலங்காரத்திற்காக அல்ல; பாதசாரிகளின் பாதுகாப்பிற்காக" - டிபிகேஎல் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

"சாலைத் தடுப்பான்கள் அலங்காரத்திற்காக அல்ல; பாதசாரிகளின் பாதுகாப்பிற்காக" - டிபிகேஎல் வலியுறுத்து

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.15-

நகர்புறங்களில் சாலையோரத் தடுப்பான்கள் அமைத்திருப்பது, சாலைகளை அலங்கரிப்பதற்காக அல்ல, மாறாக அவை அவ்வழியே செல்லும் பாதசாரிகளைப் பாதுகாப்பதற்காக என கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல் பொதுமக்களை நினைவூட்டியுள்ளது.

சாலைகளைப் பயன்படுத்துவோர், பாதசாரிகளை மதித்து, நடைபாதைகளில் வாகனங்கள் மற்றும் மோட்டார்களை நிறுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் டிபிகேஎல் வலியுறுத்தியுள்ளது.

Bollards எனப்படும் சாலைத் தடுப்பான்களானது, பொதுமக்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, இரவு மற்றும் மழை நேரங்களில் ஒளிரக்கூடிய தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் டிபிகேஎல் குறிப்பிட்டுள்ளது.

ஆகவே, சாலைத் தடுப்பான்களை மறைக்கும் வகையில், பொதுமக்கள், எந்த ஓர் இடையூறையும் செய்யக்கூடாது என்றும் எச்சரித்துள்ளது.

இதன் மூலம், கோலாலம்பூரை அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட நகரமாக மாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை டிபிகேஎல் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

Related News

மலாக்கா போலீஸ் தலைவர் வெளியிட்டது பொய்யான அறிக்கையாகும்: புதிய ஆதாரங்களுடன் வாதிட்டடார் அருண் துரைசாமி

மலாக்கா போலீஸ் தலைவர் வெளியிட்டது பொய்யான அறிக்கையாகும்: புதிய ஆதாரங்களுடன் வாதிட்டடார் அருண் துரைசாமி

மலாக்கா மாநில போலீஸ் தலைவர் ஸுல்கைரி முக்தார் விடுப்பில் அனுப்பப்பட வேண்டும்

மலாக்கா மாநில போலீஸ் தலைவர் ஸுல்கைரி முக்தார் விடுப்பில் அனுப்பப்பட வேண்டும்

விபத்தில் இளைஞருக்கு மரணம் விளைவித்ததாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

விபத்தில் இளைஞருக்கு மரணம் விளைவித்ததாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

வர்த்தகர் ஆல்பெர்ட் தே துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டாரா? விசாரணையைத் தொடங்கியது போலீஸ் துறை

வர்த்தகர் ஆல்பெர்ட் தே துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டாரா? விசாரணையைத் தொடங்கியது போலீஸ் துறை

மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: புக்கிட் அமான் சி.ஐ.டி. தலைவர் டத்தோ குமாரிடமிருந்து கைநழுவியதா?

மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: புக்கிட் அமான் சி.ஐ.டி. தலைவர் டத்தோ குமாரிடமிருந்து கைநழுவியதா?

இணைய பாதுகாப்புச் சட்டமானது பயனர்களைப் பாதுகாக்குமே தவிர சுதந்திரத்தைப் பறிக்காது - எம்சிஎம்சி உறுதி

இணைய பாதுகாப்புச் சட்டமானது பயனர்களைப் பாதுகாக்குமே தவிர சுதந்திரத்தைப் பறிக்காது - எம்சிஎம்சி உறுதி