Mar 10, 2026
Thisaigal NewsYouTube
2 நிமிடத்திற்கு முன்பு தொடர்பு துண்டிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

2 நிமிடத்திற்கு முன்பு தொடர்பு துண்டிக்கப்பட்டது

Share:

கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி 1சுங்கை பூலோ அருகில் கத்ரி நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய பீச்க்ராஃப்ட் 1 இலகு ரக விமானம், சுபாங், சுல்தான் அப்துல் அசிஸ் ஷா விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக பிற்பகல் 2.47 மணி வரையில் விமான நிலைய கட்டுப்பாட்டுக் கோபுரத்துடன் தொடர்பில் இருந்ததாக இன்று வெளியிடப்பட்ட அந்த விமான விபத்து தொடர்பான பூர்வாங்க விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அந்த இலகு ரக விமானம், சரியாக பிற்பகல் 2.48 மணிக்கு விமான நிலையத்தின் 15 ஆவது ஓடுபாதையில் தரையிறங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், ஆனால், அதன் பின்னர் விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டது.
விமான நிலைய கட்டுப்பாட்டுக் கோபுரத்தின் ராடார் திரையில் ஆகக்கடைசியாக பதிவான நிலவரத்தின்படி விமானம், 2,600 அடி உயரத்தில் பறந்துள்ளது. விமானத்தின் வேகம் குறைக்கப்பட்டு, தரை இறங்குவதற்கு ஏதுவாக சக்கரங்கள் இறக்கப்பட்டு , பிற்பகல் 2.49 மணிக்கு 1,025 அடி உயரத்திலிருந்து 550 அடிக்கு இறங்கிய பின்னர் விமானத்தின் தொடர்பு முழுமையாக செயலிழந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்மினாவில் நிகழ்ந்த இரண்டாவது விமான விபத்தான இந்த பீச்க்ராஃப் 1 இலகு ரக விமானம் விபத்தில் தரையில் வாகனத்தில் பயணம் செய்த இருவரும், விமானத்தில் பயணம் செய்த எட்டு பேரும் உயிரிழந்தனர். இதில் பகாங் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் கொல்லப்பட்டார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு