Jul 4, 2026
Thisaigal NewsYouTube
துன் மகாதீர் நாட்டிற்குத் துரோகம் இழைத்துள்ளார் - பிரதமர் அன்வார்
தற்போதைய செய்திகள்

துன் மகாதீர் நாட்டிற்குத் துரோகம் இழைத்துள்ளார் - பிரதமர் அன்வார்

Share:

புத்ராஜெயா, ஜூலை.26-

ஜோகூர் கடற்பரப்பில் வீற்றிருக்கும் பூலாவ் பத்து பூத்தே தீவு விவகாரத்தில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது நாட்டிற்குத் துரோகம் இழைத்துள்ளதாக வெளிப்படையாகத் தெரிந்த நிலையில், அவருக்கு எதிராக குற்றத்தன்மையை அரச விசாரணை ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

எனினும், முன்னாள் லங்காவி எம்.பி.யான துன் மகாதீரின் நிலை மற்றும் அவரின் வயதைக் கருத்தில் கொண்டு அவர் மீது வழக்குத் தொடர வேண்டாம் என்று அமைச்சரவை முடிவு செய்ததாக பிரதமர் கூறினார்.

இருப்பினும், பத்து பூத்தே தீவு விவகாரத்தில், துன் மகாதீருக்கு எதிராக இதற்கு முன்பு நாடாளுமன்றத்தில் தாம் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் தம்மை நாடாளுமன்ற சுயேட்சை விசாரணைக் குழு முன்னிலையில் நிறுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் ஒரு தீர்மானத்தைச் சமர்ப்பித்துள்ள நடவடிக்கையானது, நாடாளுமன்ற விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்ட ஒரு நடைமுறையாகும் என்று அன்வார் விளக்கினார்.

துன் மகாதீர் குற்றம் இழைத்துள்ளார் என்று தாம் சொல்லவில்லை. மாறாக, இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அரச விசாரணை ஆணைக்குழுதான், அந்த முன்னாள் பிரதமர் குற்றம் இழைத்துள்ளார், துரோகம் செய்துள்ளார் என்று பரிந்துரை செய்துள்ளது என்று அன்வார் தெளிவுபடுத்தினார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது