தேச நிந்தனை குற்றச்சாட்டு தொடர்பாக தம்மை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்கு போலீஸ் துறை தம்முடன் தொடர்பு கொண்டதாகவும், ஆனால் அந்த அழைப்புகளை தாம் நிராகரித்து விட்டதாகவும் போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் கூறியுள்ள குற்றச்சாட்டை கெடா மந்திரி பெசார் முஹமட் சனுசி முகமட் நோர் மறுத்துள்ளார்.
தம்மை செலாயாங் நீதிமன்றத்தில் குற்றங்சாட்டுவதற்கு முதல் நாள், தாம் சம்பந்தப்பட்ட அனைத்து கூட்டங்களும் முடிந்த பின்னரே இரவு 11.40 மணியளவில் தாம், போலீஸ் படையுடன் தொடர்பு கொண்டதாக சனூசி தெரிவித்தார். அதற்கு முன்னதாக, தமது அதிகாரிகளை போலீசார் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், அப்போது தாம் கூட்டத்தில் இருந்ததாக சனூசி குறிப்பிட்டார்.
கூட்டம் நடந்து கொண்டு இருந்த போது ஓர் அழைப்பை பெற்றதாகவும், தாம் யார் என்று கேட்ட போது புக்கிட் அமான் என்று பதில் வந்ததாக சனூசி விவரித்தார். எனவே போலீசாரின் அழைப்பை தாம் நிராகரித்து விட்டதாக கூறப்படுவது உண்மை அல்ல என்று சனூசி வாதிட்டார். போலீசார் தம்மை அழைத்தது, அதற்கு தாம் பதில் அளித்தது மற்றும் கடந்த திங்கட்கிழமை இரவு முதல் போலீசாருடன் தாம் தொடர்பில் இருந்தது முதலிய கைப்பேசி ஸ்கிறீன்ஷோர்ட்ஸ் பதிவை தாம் கொண்டுள்ளதாக சனூசி விளக்கினார்.

Related News

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு


