வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையின் ஜோகூர் பாரு - சிம்பாங் ரெங்காம் வழித்தடத்தை விரிவக்கும் முதலாம், இரண்டாம் கட்டப் பணிகள் நிறைவடைய 3 ஆண்டுகள் தேவைப்படும்.
இந்த விரிவாக்கப் பணிகளை தங்காக் வரையில் மேற்கொள்ள ஜோகூர் மாநில அரசு பரிந்துரைத்துள்ளதாக அம்மாநில முதல்வர் டத்தோ ஒன் ஹஃபிஸ் காசி தெரிவித்தார்.
PLUS Malaysia நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ நிக் அரினா நிக் ஜாஃபார் உடனான சந்திப்பின்பீது இவ்விவகாரத்துடன், ஜோகூர் மாநில போக்குவரத்து நெரிசல், பராமறிப்புப் பணிகள், வசதிகள் மேம்பாடு போன்றவையும் விவாதிக்கப்பட்டதாக டத்தோ ஒன் ஹஃபிஸ் குறிப்பிட்டார்.








