Mar 5, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்ததாகக் கூறப்படும் புகார்: ஒருவரிடம் வாக்குமூலம் பதிவு
தற்போதைய செய்திகள்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்ததாகக் கூறப்படும் புகார்: ஒருவரிடம் வாக்குமூலம் பதிவு

Share:

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்துடன் தொடர்புடைய ஒரு நபரிடம் போலீஸ் துறை வாக்குமூலம் பெற்றுள்ளதாகப் போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ காலித் இஸ்மாயில் தெரிவித்தார்.

இது தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்ட சில நேரத்திலேயே, சம்பந்தப்பட்ட அந்த நபர், தானாகவே முன்வந்து வாக்குமூலம் அளித்ததாக ஐஜிபி குறிப்பிட்டார்.

இன்று உள்துறை அமைச்சின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காலித் இஸ்மாயில், இந்த விவகாரத்துடன் தொடர்புடைய மேலும் சில பெயர்கள் கிடைத்துள்ளன என்றும், அவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் கூறினார்.

இதுவரை ஒருவரிடம் மட்டுமே வாக்குமூலம் பெறப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாக மேலும் மூன்று அல்லது நான்கு பேர் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்று காலிட் இஸ்மாயில் தெரிவித்தார். இந்தச் சதித் திட்டம் மலேசியாவிற்கு வெளியே உள்ள தொடர்புகளையும் கொண்டிருக்கக்கூடும் என்பதால், விசாரணை மிகவும் விரிவாகவும் எச்சரிக்கையுடனும் நடத்தப்பட்டு வருவதாக அவர் விளக்கினார்.

மறைந்த முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் ஜைனுடீனின் மனைவி புவான்ஸ்ரீ நைமா காலித் விசாரணைக்கு அழைக்கப்படுவாரா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று ஐஜிபி பதிலளித்தார்.

முன்னதாக, அரசாங்கத்தை நிலைகுலையச் செய்யும் முயற்சியில் தமக்கு எந்தப் பங்கும் இல்லை என்று நைமா காலித் மறுப்பு தெரிவித்திருந்தார். தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை மற்றும் அபத்தமானவை என்று அவர் சாடியுள்ளார்.

Related News

மேரு போலீஸ் நிலையத்திலேயே பயங்கர மோதல்: பிடிபட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது

மேரு போலீஸ் நிலையத்திலேயே பயங்கர மோதல்: பிடிபட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது

கிள்ளானில் லாரி ஓட்டுநர் மீது துப்பாக்கிச் சூடு: தப்ப முயன்ற மர்ம நபர்களை கார் மோதி வீழ்த்திய பரபரப்பு

கிள்ளானில் லாரி ஓட்டுநர் மீது துப்பாக்கிச் சூடு: தப்ப முயன்ற மர்ம நபர்களை கார் மோதி வீழ்த்திய பரபரப்பு

பினாங்கில் பட்டாக்கத்தியால் தாக்கி ஒருவரின் கையைத் துண்டித்த சம்பவம் : 4 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது

பினாங்கில் பட்டாக்கத்தியால் தாக்கி ஒருவரின் கையைத் துண்டித்த சம்பவம் : 4 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது

துபாயில் சிக்கியுள்ள மலேசியர்களை தாயகத்திற்குத் திருப்பி அனுப்ப மலேசியத் தூதரகங்கள் முயற்சி

துபாயில் சிக்கியுள்ள மலேசியர்களை தாயகத்திற்குத் திருப்பி அனுப்ப மலேசியத் தூதரகங்கள் முயற்சி

பாசிர் கூடாங்கில் தொழிலதிபரிடம் 5 லட்சம் ரிங்கிட் கொள்ளை: 24 மணி நேரத்தில் 8 பேர் கைது

பாசிர் கூடாங்கில் தொழிலதிபரிடம் 5 லட்சம் ரிங்கிட் கொள்ளை: 24 மணி நேரத்தில் 8 பேர் கைது

சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பவர்கள் மீது பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: மஹிமா வேண்டுகோள்

சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பவர்கள் மீது பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: மஹிமா வேண்டுகோள்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்ததாகக் கூறப்படும் புகார்... | Thisaigal News