Feb 7, 2026
Thisaigal NewsYouTube
ஜாலான் பேராக்கில் கிரேன் விபத்து: வங்கதேச ஆடவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

ஜாலான் பேராக்கில் கிரேன் விபத்து: வங்கதேச ஆடவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.07-

நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஜாலான் பேராக் சாலையில் விளம்பரப் பலகை பழுது பார்க்கும் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, spider lift இயந்திரத்திற்கு அடியில் சிக்கி வங்கதேச ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பவமானது நேற்று இரவு சுமார் 10.40 மணியளவில் நிகழ்ந்ததாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறையின் தலைவர் முஹமட் ஸம்சூரி முஹமட் இசா தெரிவித்தார்.

சம்பவத்தின் போது, இயந்திரமானது சமநிலை தவறி கவிழ்ந்ததில், அதை இயக்கிக் கொண்டிருந்த 32 வயது ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டவர், சாலையோரத்திலிருந்து, ரிமோட் கண்ட்ரோல் மூலம் பழுது பார்க்கும் பணிகளை மேற்கொண்டிருந்த போது, spider lift இயந்திரமானது நடைபாதையின் விளிம்பில் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதன் விளைவாக, இயந்திரமானது சமநிலையை இழந்து அந்த ஆடவர் மீது கவிழ்ந்தோடு அவருக்கு அருகில் இருந்த இரண்டு வாகனங்களையும் நசுக்கியது.

இவ்விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரரிடம் போலீசார் மேல் விசாரணை செய்து வருகின்றனர்.

Related News

சாகிர் நாயக் விவகாரம் குறித்து மலேசியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம் - இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் தகவல்

சாகிர் நாயக் விவகாரம் குறித்து மலேசியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம் - இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் தகவல்

சீனப்புத்தாண்டை முன்னிட்டு சுங்கக் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி: பொதுப்பணித்துறை அமைச்சர் அலெக்ஸண்டர் நந்தா லிங்கி அறிவிப்பு

சீனப்புத்தாண்டை முன்னிட்டு சுங்கக் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி: பொதுப்பணித்துறை அமைச்சர் அலெக்ஸண்டர் நந்தா லிங்கி அறிவிப்பு

பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு Garah பேரணிக்கு போலீஸ் தடை

பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு Garah பேரணிக்கு போலீஸ் தடை

சட்டவிரோத ஆலயம்" என்ற சொல்லாடலை நிறுத்துங்கள்: வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக பேரணி நடத்துகின்றவர்கள் மீது சட்ட  நடவடிக்கை எடுப்பீர்: DAPSY தலைவர் வூ கா லியோங் வலியுறுத்தல்

சட்டவிரோத ஆலயம்" என்ற சொல்லாடலை நிறுத்துங்கள்: வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக பேரணி நடத்துகின்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பீர்: DAPSY தலைவர் வூ கா லியோங் வலியுறுத்தல்

மலேசிய கூட்டுப் படைகளின் தளபதியாக தெங்கு ஃபௌஸி இப்ராஹிம் நியமனம்

மலேசிய கூட்டுப் படைகளின் தளபதியாக தெங்கு ஃபௌஸி இப்ராஹிம் நியமனம்

சட்டவிரோத கோயில்களுக்கு எதிரான பேரணி தொடரும் - சர்ச்சைக்குரிய சமய பரப்புரையாளர் அறிவிப்பு

சட்டவிரோத கோயில்களுக்கு எதிரான பேரணி தொடரும் - சர்ச்சைக்குரிய சமய பரப்புரையாளர் அறிவிப்பு