May 20, 2026
Thisaigal NewsYouTube
ஒத்துழைப்பை வலுப்படுத்தியது ஒற்றுமை அரசாங்கத்தின் தேசிய மாநாடு
தற்போதைய செய்திகள்

ஒத்துழைப்பை வலுப்படுத்தியது ஒற்றுமை அரசாங்கத்தின் தேசிய மாநாடு

Share:

ஒற்றுமை அரசாங்கத்தின் தேசிய மாநாடு, உறுப்பு கட்சிகள் மத்தியில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஓர் ஆக்கப்பூர்வமான மாநாடாக அமைந்தது என்று துணை பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோஃப் தெரிவித்தார்.

கோலாலம்பூர், உலக வாணிப மையத்தில் இன்று தொடங்கிய ஒற்றுமை அரசாங்கத்தின் முதலாவது தேசிய மாநாட்டில் பங்குக்கொண்ட 19 அரசியல் கட்சிகள், தங்களுக்குள் மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்த போதிலும், மாநாட்டின் தன்மைக்கு ஏற்ப ஒருமை பாட்டுடன் அவை செயல்பட்டது, மாநாட்டிற்கு அடித்தளமிட்டுள்ளது என்று ஃபடில்லா யூசோஃப் வர்ணித்தார்.

Related News