Dec 3, 2025
Thisaigal NewsYouTube
நாயை அடித்துக் கொன்ற நபருக்கு 20 ஆயிரம் ரிங்கிட் அபராதம்
தற்போதைய செய்திகள்

நாயை அடித்துக் கொன்ற நபருக்கு 20 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

Share:

ஈப்போ, அக்டோபர்.01-

இரண்டு வாரங்களுக்கு முன்பு நாயை, இரும்புத் தடியால் சரமாரியாக அடித்து, துடிக்க – துடிக்கக் கொன்ற ஆடவர் ஒருவருக்கு ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 20 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.

அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

23 வயது எம். தேனிஷ்குமார் என்ற அந்த ஆடவர், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் அனிஸ் ஹனினி அப்துல்லா இத்தீர்ப்பினை வழங்கினார்.

சம்பந்தப்பட்ட ஆடவர், நாயை இரும்புத் தடியால் அடித்துக் கொல்லும் காட்சி தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து அந்த இளைஞரின் செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர்.

கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி இரவு 10.30 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை ஈப்போ, லெபோ கிளேடாங் உத்தாரா, தாமான் அர்கிட் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் தேனிஷ்குமார் இந்த கொடூரச் செயலைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் ஒரு லட்சம் ரிங்கிட் அபராதம் அல்லது கூடியபட்சம் மூன்று ஆண்டு சிறை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 2015 ஆம் ஆண்டு விலங்குப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அந்த இந்திய இளைஞர் குற்றஞ்சாட்டப்பட்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்