May 18, 2026
Thisaigal NewsYouTube
சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை
தற்போதைய செய்திகள்

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

Share:

கூச்சிங், மே.18-

அண்டை வீட்டுச் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 8 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

சரவாக், பெட்ரா ஜெயா பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து 12 மற்றும் 8 வயதுடைய இரு சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 69 வயது முதியவர், இன்று கூச்சிங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு வெவ்வேறு நீதிமன்ற அமர்வுகளில் தலா 15 ஆண்டுகள் சிறையும் 4 பிரம்படிகளும் விதிக்கப்பட்ட நிலையில், இந்தத் தண்டனைகளை அவர் அடுத்தடுத்து அனுபவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், தண்டனைக் காலத்தின் போது அவர் மறுவாழ்வு மற்றும் ஆலோசனைகளுக்கு உட்பட வேண்டும் என்றும், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அவர் போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

12.4 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோத இறைச்சிப் பொருட்கள் பறிமுதல்

12.4 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோத இறைச்சிப் பொருட்கள் பறிமுதல்