கோலாலம்பூர், மே.18-
அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துவதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மலேசியாவில் நான்கில் மூன்று பெரியவர்கள் வழக்கமாக அதிக உப்பு உள்ள உணவுகளையே உட்கொள்வதுடன், உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் 5 கிராம் அளவை விட அதிகமாக, அதாவது 7.3 கிராம் உப்பைத் தினசரி உட்கொள்கிறார்கள்.
சாஸ்கள், குழம்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உப்பு மறைந்திருப்பதால், மலிவான உணவுகளை நாடும் பல்கலைக்கழக மாணவர்கள் இந்த ஆபத்தில் அதிகம் சிக்குகின்றனர்.
சமையலில் உப்பைக் குறைப்பது மற்றும் மாற்று உப்புகளைப் பயன்படுத்துவது போன்ற சிறிய மாற்றங்கள் மூலம் மலேசியர்கள் தாங்கள் அறியாமலேயே அதிக உப்பு உட்கொள்வதைத் தவிர்க்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.








