Aug 2, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் தொல்லைக்கு இலக்கான ஆண்கள் மறைக்காதீர்கள் !
தற்போதைய செய்திகள்

பாலியல் தொல்லைக்கு இலக்கான ஆண்கள் மறைக்காதீர்கள் !

Share:

பாலியல் தொல்லைக்கு இலக்கான ஆண்கள் , தங்களுக்கு நேர்ந்த இந்தப் பிரச்சனை குறித்து புகாரளிக்க துணிச்சலாக முன் வர வேண்டும் என மகளிர், குடும்ப, சமூக நல அமைச்சர் டத்தோ செரி நான்சி ஷுக்ரி தெரிவித்தார்.

தங்களுக்கு நேரும் பிரச்சனையை மனதில் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவர்கள் ஆண்கள்.

பணியிடத்தில் பாலியல் தொந்தரவுக்கு ஆளானவர்கள் பெரும்பாலும் தங்கள் மேலதிகாரிகளை சம்பந்தப்பட்டிருப்பதையும் பாதிக்கப்பட்டவரின் அச்சத்தையும் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தைப் பற்றிய விழிப்புணர்வு நிலை இன்னும் குறைவாக இருப்பதால் இவ்வாறு வலியுறுத்துவதாக அவர் கூறினார்.

தமது அமைச்சு பெற்ற மொத்தப் புகார்களில் 10 விழுக்காடு ஆண்கள் சந்திக்கும் பிரச்சனை எனக் கூறும் அவர், பாதிக்கப்பட்ட எல்லா ஆண்களும் புகார் கொடுப்பதில்லை என்றார்.

எனவே, இந்த விவாகாரத்தை சாதாரணமாக நினைத்து விடாமல் பாலியல் தொல்லைக்கு இலக்கான எல்லா தரப்பு வயது ஆண்களும் துணிந்து புகார் அளிக்க வேண்டும் என்றார் அவர்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு