கடந்த வாரம் கோத்தா பாரு நீதிமன்ற வளாகத்திலுள்ள போலீஸ் அறையில் 19.8 கிராம் மெத்தாம்பேட்டமைன் என்ற போதைப்பொருளை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரி ஒருவர், நேற்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாம் குற்றமற்றவர் எனத் தெரிவித்தார்.
38 வயதான முகமது ஃபாதிருல் மூசா என்ற அந்த அதிகாரி, நீதிபதி ரயிஸ் இம்ரான் ஹமித் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்தக் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.
இக்குற்றச்சாட்டானது, 1952 ஆம் ஆண்டின் ஆபத்தான போதைப்பொருள் சட்டப்பிரிவு 12(2)-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அதே சட்டத்தின் பிரிவு 39A(1)-ன் கீழ், தண்டனை வழங்கப்படக் கூடியதாகும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ஒன்பது பிரம்படி தண்டனைகளும் விதிக்கப்படலாம்.








