Jun 19, 2026
Thisaigal NewsYouTube
நீதிமன்ற வளாக போலீஸ் அறையில் போதைப்பொருள் வைத்திருந்ததாக அதிகாரி மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

நீதிமன்ற வளாக போலீஸ் அறையில் போதைப்பொருள் வைத்திருந்ததாக அதிகாரி மீது குற்றச்சாட்டு

Share:

கடந்த வாரம் கோத்தா பாரு நீதிமன்ற வளாகத்திலுள்ள போலீஸ் அறையில் 19.8 கிராம் மெத்தாம்பேட்டமைன் என்ற போதைப்பொருளை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரி ஒருவர், நேற்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாம் குற்றமற்றவர் எனத் தெரிவித்தார்.

38 வயதான முகமது ஃபாதிருல் மூசா என்ற அந்த அதிகாரி, நீதிபதி ரயிஸ் இம்ரான் ஹமித் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்தக் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.

இக்குற்றச்சாட்டானது, 1952 ஆம் ஆண்டின் ஆபத்தான போதைப்பொருள் சட்டப்பிரிவு 12(2)-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அதே சட்டத்தின் பிரிவு 39A(1)-ன் கீழ், தண்டனை வழங்கப்படக் கூடியதாகும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ஒன்பது பிரம்படி தண்டனைகளும் விதிக்கப்படலாம்.

Related News

பண்டார் சுன்சூரியா அடுக்குமாடிக் குடியிருப்பில் வெளிநாட்டுப் பெண்ணைக் கொலை செய்ததாக உள்ளூர் பெண் மீது குற்றச்சாட்டு

பண்டார் சுன்சூரியா அடுக்குமாடிக் குடியிருப்பில் வெளிநாட்டுப் பெண்ணைக் கொலை செய்ததாக உள்ளூர் பெண் மீது குற்றச்சாட்டு

தேர்தல்களில் 30 விழுக்காடு பெண்களை களமிறக்கும் சட்டத்திற்கு அமனா ஆதரவு

தேர்தல்களில் 30 விழுக்காடு பெண்களை களமிறக்கும் சட்டத்திற்கு அமனா ஆதரவு

மலேசியாவுக்கு நீண்டகால பெட்ரோல், எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்க ரஷ்யா ஒப்புதல்

மலேசியாவுக்கு நீண்டகால பெட்ரோல், எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்க ரஷ்யா ஒப்புதல்

யுஎம் பேராசிரியர் மீதான பாலியல் புகார் - விசாரணை அறிக்கையை பொதுவில் வெளியிட மாணவர் அமைப்பு வலியுறுத்து

யுஎம் பேராசிரியர் மீதான பாலியல் புகார் - விசாரணை அறிக்கையை பொதுவில் வெளியிட மாணவர் அமைப்பு வலியுறுத்து

தும்பாட்டில் 15 வயது சிறுமி பலமாகத் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

தும்பாட்டில் 15 வயது சிறுமி பலமாகத் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

போக்குவரத்து அபராதங்களை உயர்த்துதல் உட்பட  சாலைப் போக்குவரத்துச் சட்டத்தில் புதிய திருத்தங்கள் பரிந்துரை

போக்குவரத்து அபராதங்களை உயர்த்துதல் உட்பட சாலைப் போக்குவரத்துச் சட்டத்தில் புதிய திருத்தங்கள் பரிந்துரை