Jun 19, 2026
Thisaigal NewsYouTube
பண்டார் சுன்சூரியா அடுக்குமாடிக் குடியிருப்பில் வெளிநாட்டுப் பெண்ணைக் கொலை செய்ததாக உள்ளூர் பெண் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பண்டார் சுன்சூரியா அடுக்குமாடிக் குடியிருப்பில் வெளிநாட்டுப் பெண்ணைக் கொலை செய்ததாக உள்ளூர் பெண் மீது குற்றச்சாட்டு

Share:

இம்மாத தொடக்கத்தில் பண்டார் சுன்சூரியாவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் இந்தோனேசியப் பெண்ணைக் கொலை செய்ததாக 44 வயதுடைய பெண் ஒருவர் இன்று சிப்பாங் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

44 வயதான சின் சாவ் லான் என்ற அப்பெண் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

சுயதொழில் செய்து வரும் சின் சாவ் லான், புத்ரி என அடையாளம் காணப்பட்ட இந்தோனேசியப் பெண்ணை, கடந்த ஜூன் 3 ஆம் தேதி பிற்பகல் 2.31 மணியளவில், பண்டார் சுன்சூரியாவில் உள்ள தி ஆலிவ் அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள வீடு ஒன்றில் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கொலைக் குற்றச்சாட்டுகள் உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால், சின் சாவ் லான்னிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.

நீதிபதி கைராத்துல் அனிமா ஜெலானி இவ்வழக்கை வரும் ஜூலை 21-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Related News

தேர்தல்களில் 30 விழுக்காடு பெண்களை களமிறக்கும் சட்டத்திற்கு அமனா ஆதரவு

தேர்தல்களில் 30 விழுக்காடு பெண்களை களமிறக்கும் சட்டத்திற்கு அமனா ஆதரவு

நீதிமன்ற வளாக போலீஸ் அறையில் போதைப்பொருள் வைத்திருந்ததாக அதிகாரி மீது குற்றச்சாட்டு

நீதிமன்ற வளாக போலீஸ் அறையில் போதைப்பொருள் வைத்திருந்ததாக அதிகாரி மீது குற்றச்சாட்டு

மலேசியாவுக்கு நீண்டகால பெட்ரோல், எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்க ரஷ்யா ஒப்புதல்

மலேசியாவுக்கு நீண்டகால பெட்ரோல், எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்க ரஷ்யா ஒப்புதல்

யுஎம் பேராசிரியர் மீதான பாலியல் புகார் - விசாரணை அறிக்கையை பொதுவில் வெளியிட மாணவர் அமைப்பு வலியுறுத்து

யுஎம் பேராசிரியர் மீதான பாலியல் புகார் - விசாரணை அறிக்கையை பொதுவில் வெளியிட மாணவர் அமைப்பு வலியுறுத்து

தும்பாட்டில் 15 வயது சிறுமி பலமாகத் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

தும்பாட்டில் 15 வயது சிறுமி பலமாகத் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

போக்குவரத்து அபராதங்களை உயர்த்துதல் உட்பட  சாலைப் போக்குவரத்துச் சட்டத்தில் புதிய திருத்தங்கள் பரிந்துரை

போக்குவரத்து அபராதங்களை உயர்த்துதல் உட்பட சாலைப் போக்குவரத்துச் சட்டத்தில் புதிய திருத்தங்கள் பரிந்துரை