Mar 21, 2026
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டுகளை வாசித்து முடிக்க ஒரு மணி நேரமானது
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டுகளை வாசித்து முடிக்க ஒரு மணி நேரமானது

Share:

சிரம்பான், மே 15-

சிரம்பான், செஷன்ஸ் நீதிமன்றத்தில் சுங்கத்துறை அதிகாரி ஒருவருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள 43 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை, ஒவ்வொன்றாக வாசித்து முடிப்பதற்கு சுமார் ஒரு மணி நேரமானது.

41 வயதுடைய முகமது சையத் என்ற அந்த சுங்கத்துறை அதிகாரி, கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரையில் 70 ஆயிரம் வெள்ளி சம்பந்தப்பட்ட 43 லஞ்ச ஊழல் குற்றங்களை புரிந்து இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி மியோர் சுலைமான் அஹ்மத் தர்மிஸி முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த சுங்கத்துறை அதிகாரி, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கார்கோ பிரிவில் சுங்கத்துறை அதிகாரியாக பணிபுரிந்த போது லஞ்சம் பெற்று வந்ததாக அவருக்கு எதிரான 43 குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பிட்ட சரக்கு லோரிகளை சோதனையிடாமல், அந்த லோரிகள் KLIA கார்கோ பிரிவிலிருந்து வெளியேறுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரி துணை புரிந்ததாக குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரியை கைது செய்வதற்காக அவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் 65 நாட்களாக தேடி வந்ததாகவும், குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ள அவருக்கு ஜாமீன் அனுமதிக்கப்படக்கூடாது என்றும் நீதிமன்றத்தை SPRM கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து