Apr 24, 2026
Thisaigal NewsYouTube
 பயணிகளின் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்: 7 மாதச் சிறை தண்டனை
தற்போதைய செய்திகள்

பயணிகளின் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்: 7 மாதச் சிறை தண்டனை

Share:

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில், பயணிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அபாயகரமான முறையில் பேருந்தை ஓட்டிய 53 வயது ஓட்டுநருக்கு 7 மாதச் சிறைத் தண்டனையும், 8 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் மலாக்கா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று விதித்தது.

கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி அதிகாலை, மலாக்கா ஆயர் குரோ அருகே நிகழ்ந்த இச்சம்பவத்தின் போது பேருந்தில் 15 பயணிகள் இருந்துள்ளனர்.

ஓட்டுநர் தம்ரின் இப்ராஹிம் என்பவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவருக்கு சிறைத் தண்டனையுடன் 5 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க தடையும் விதிக்கப்பட்டது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்தத் தண்டனை வழங்கப்படுவதாக மாஜிஸ்திரேட் குறிப்பிட்டார். அபராதத்தைச் செலுத்தத் தவறினால் அவர் மேலும் 5 மாதங்கள் சிறையில் இருக்க நேரிடும் என்று மாஜிஸ்திரேட தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News

பிடிக்காவிட்டால் வராதீர்கள்": இசைத் திருவிழா விவகாரத்தில் அமைச்சர் தியோங் கிங் சிங் அதிரடி

பிடிக்காவிட்டால் வராதீர்கள்": இசைத் திருவிழா விவகாரத்தில் அமைச்சர் தியோங் கிங் சிங் அதிரடி

கோலாலம்பூர்: பொறாமையால் விபரீதம் - முன்னாள் மனைவியைக் குத்திக் கொன்ற மியான்மர் ஆடவர்

கோலாலம்பூர்: பொறாமையால் விபரீதம் - முன்னாள் மனைவியைக் குத்திக் கொன்ற மியான்மர் ஆடவர்

மது போதையில் வாகனம் ஓட்டி விபத்து: ராணுவ அதிகாரி 5 நாள் போலீஸ் காவலில்

மது போதையில் வாகனம் ஓட்டி விபத்து: ராணுவ அதிகாரி 5 நாள் போலீஸ் காவலில்

128 மில்லியன்  ரிங்கிட்  சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்: தொழிலதிபர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

128 மில்லியன் ரிங்கிட் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்: தொழிலதிபர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

வெளிநாட்டில் பணத்கை குவித்து வைத்துள்ளேனா? ஆதாரம் இருந்தால் கொண்டு வாருங்கள்": அன்வார் பதிலடி

வெளிநாட்டில் பணத்கை குவித்து வைத்துள்ளேனா? ஆதாரம் இருந்தால் கொண்டு வாருங்கள்": அன்வார் பதிலடி

பங்சார் துப்பாக்கிச் சூடு: கும்பல் பகை காரணமென போலீஸ் தகவல்

பங்சார் துப்பாக்கிச் சூடு: கும்பல் பகை காரணமென போலீஸ் தகவல்