வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில், பயணிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அபாயகரமான முறையில் பேருந்தை ஓட்டிய 53 வயது ஓட்டுநருக்கு 7 மாதச் சிறைத் தண்டனையும், 8 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் மலாக்கா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று விதித்தது.
கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி அதிகாலை, மலாக்கா ஆயர் குரோ அருகே நிகழ்ந்த இச்சம்பவத்தின் போது பேருந்தில் 15 பயணிகள் இருந்துள்ளனர்.
ஓட்டுநர் தம்ரின் இப்ராஹிம் என்பவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவருக்கு சிறைத் தண்டனையுடன் 5 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க தடையும் விதிக்கப்பட்டது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்தத் தண்டனை வழங்கப்படுவதாக மாஜிஸ்திரேட் குறிப்பிட்டார். அபராதத்தைச் செலுத்தத் தவறினால் அவர் மேலும் 5 மாதங்கள் சிறையில் இருக்க நேரிடும் என்று மாஜிஸ்திரேட தமது தீர்ப்பில் தெரிவித்தார்.








