May 21, 2026
Thisaigal NewsYouTube
பயணிகளின் தேவையை பூர்த்தி செய்துள்ளது
தற்போதைய செய்திகள்

பயணிகளின் தேவையை பூர்த்தி செய்துள்ளது

Share:

தொழில்நுட்ப பிரச்னை காரணமாக தென் கொரியா, Incheon அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிக்கி பரிதவித்த பயணிகளுக்கு உரிய வசதிகளை ஏர் ஆசியா விமான நிறுவனம் செய்து தந்துள்ளதாக அந்த சிக்கன கட்டண விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

மலேசியாவிற்கு புறப்படவிருந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்னை காரணமாக சுமார் 27 மணி நேரமாக அந்தப் பயணிகள் பெரும் பரிதவிப்புக்கு ஆளானதாக கூறப்படுகிறது.

எனினும் பயணிகளுக்கு உரிய அனைத்து வசதிகளையும் ஏர் ஆசியா விமான நிறுவனம் செய்து தந்துள்ளதாக அந்த விமான நிறுவனம் தெளிவுபடுத்தியது.

Related News