கோலாலம்பூர்,ஜன.18
முன்னாள் பிரதமர் ஒருவரின் மகன், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் விசாரணைக்கு ஆளாகியுள்ளார். சம்பந்தப்பட்ட முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவா? என்பது குறித்து எந்தவொரு விவரமும் வெளியிடப்படவில்லை என்ற போதிலும் 90 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் சம்பந்தப்பட்ட முன்னாள் பிரதமரின் மகன் தொடர்புடைய வர்த்தகம் தொடர்பில் அவரிடம் எஸ்பிஆர்எம் வாக்குமூலம் பதிவு செய்து இருப்பதாக தெரிகிறது.
முன்னாள் பிரதமர் ஒருவரின் மகன், எஸ்பிஆர்எம் விசாரணைக்கு ஆளாகியிருப்பதை அந்த ஆணையம் உறுதி செய்துள்ளது. சம்பந்தப்பட்ட முன்னாள் பிரதமரின் மகனுக்கு சொந்தமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டில் உள்ள சொத்து விவரங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு சொந்தமான சார்பு நிறுவனமான GLC யின் துணை நிறுவனம் ஒன்றை கொள்முதல் செய்தது தொடர்பில் அந்த முன்னாள் பிரதமரின் மகன் தற்போது எஸ்பிஆர்எம் விசாரணை வளையத்திற்குள் இருப்பதாக கூறப்படுகிறது.








