நாட்டில் நீர் விநியோகத்தை நிர்வகிக்கும் அனைத்து நிறுவனங்களும் தற்போது லாபமற்ற நிலையில் இயங்குவதால் நீர் கட்டணத்தை மறுஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக சிலாங்கூர் உள்கட்டமைப்பு மற்றும் விவசாய எக்ஸ்கோ இஷாம் ஹஷிம் தெரிவித்தார்.
மூலதனச் செலவு (Capex) அதிகமாக இருக்கும் வேளையில் தற்போதைய நீர் கட்டண விகிதம் குறைந்த அளவிலேயே இருப்பதாக இஷாம் ஹஷிம் கூறினார்.
சிலாங்கூர் மாநிலத்தில் நீர் கட்டணத்தை சரிசெய்வது தொடர்பாக மறுஆய்வு நடத்தப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதாக அவர் வலியுறுத்தினார்.
புதிய நீர் கட்டணத்தில் எதிர்பார்க்கப்படும் அதிகரிப்பினால் பி40 க்கு உட்பட்ட Skim Air Darul Ehsan (SADE) என்ற இலவச நீர் திட்டத்தின் பெறுநர்கள் பாதிப்படைய மாட்டார்கள் என்று இஷாம் ஹஷிம் விளக்கினார்.
20 மீட்டருக்கு மேல் நீரை பயன்படுத்தும் வணிக மற்றும் உள்நாட்டு வாசிகள் மட்டுமே இதில் ஈடுபடுவதால் SADE பெறுபவர்களுக்கு எந்தவொரு விளைவும் ஏற்படாது என்று இஷாம் ஹஷிம் அறிவித்தார்.








