சர்ச்சைக்குரிய சமய போதகர் ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பாக மலேசிய அரசாங்கம் ஏதேனும் அரசியல் உறுதிமொழி அளித்ததா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என பாஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, பிரதமர் அன்வார் இப்ராஹிம் அண்மையில் சந்தித்ததைத் தொடர்ந்து, இது தொடர்பாக ஏதேனும் பேச்சுவார்த்தை நடந்ததா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவுடனான வர்த்தகம், முதலீடு, கல்வி, தொழில்நுட்பம் உள்ளிட்ட நீண்டகால உறவுகள் முக்கியமானவை என்றாலும், அவை மலேசியாவின் நாடு கடத்தல் சட்டங்களை மீறக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
அதேவேளையில் வெளிநாடு ஒன்றிடமிருந்து முறையான நாடு கடத்தல் கோரிக்கை வந்தால், அதனை சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு பரிசீலிக்க வேண்டும் என்றும், அரசியல் பேரம் அல்லது பரிவர்த்தனையின் அடிப்படையில் முடிவு எடுக்கக் கூடாது என்றும் தக்கியுடின் தெரிவித்துள்ளார்.








