Sep 15, 2026
Thisaigal NewsYouTube
16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை
தற்போதைய செய்திகள்

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

Share:

16 வயதே உடைய மனைவியின் சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்த 38 வயது லாரி ஓட்டுநருக்கு 9 ஆண்டுகள் சிறையும், 5 பிரம்படிகளும் விதித்து மூவார் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிபதி எமிலியா கஸ்வத்தி காலிட் முன்னிலையில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, இந்த தீர்ப்பு விதிக்கப்பட்டது.

கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை 28-ஆம் தேதி, பத்து பஹாட்டில் உள்ள அவரது வீட்டில் மனைவி இல்லாத நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அச்சிறுமி கர்ப்பமானது தெரிய வந்ததையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், குற்றவியல் சட்டம் 376(1)-ன் கீழ் அவருக்கு இத்தண்டனையானது வழங்கப்பட்டது.

மேலும், சிறைத் தண்டனை காலத்தில் ஆலோசனை பெறவும், விடுதலையான பிறகு ஒரு ஆண்டு போலீஸ் கண்காணிப்பில் இருக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related News

சிகரெட் துண்டை வீசிய குற்றம்: மலேசியாவில் முதல் முறையாக சிறைத் தண்டனை

சிகரெட் துண்டை வீசிய குற்றம்: மலேசியாவில் முதல் முறையாக சிறைத் தண்டனை

24 மணி நேர கேகே மார்ட் கடைகள் இனி பாதுகாப்பு மையங்களாக செயல்படும் - கோலாலம்பூர் போலீஸ் அசத்தல் திட்டம்

24 மணி நேர கேகே மார்ட் கடைகள் இனி பாதுகாப்பு மையங்களாக செயல்படும் - கோலாலம்பூர் போலீஸ் அசத்தல் திட்டம்

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு