Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சிறப்பான அடைவு நிலை, அமைச்சர் ங்கா கோர் மிங்கிற்கு பேரா சுல்தான் பாராட்டு வாழ்த்து

Share:

கோலாலம்பூர், பிப்.28-

மேன்மை தங்கிய பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் முய்ஸுடின் ஷாவை வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங், கோலாலம்பூரில் உள்ள இஸ்தானா பேரா சங்காட் அரண்மனையில் நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது, வீடமைப்பு, ஊராட்சித்துறையின் 2024 ஆம் ஆண்டிற்கான அறிக்கையை பேரா சுல்தானிடம், அமைச்சர் ங்கா கோர் மிங் வழங்கினார்.

அந்த அறிக்கை, 2024 ஆம் ஆண்டுக்கான வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சின் செயல் நடவடிக்கைக்கான அடைவு நிலையின் வெற்றிகளைக் கோடிட்டுக் காட்டியது.

குறிப்பாக வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு, முதல் முறையாக தேசிய மேம்பாட்டு விருதை வென்றது உட்பட அந்த அமைச்சின் செயல்பாட்டுத் திறனை வெளிப்படுத்தியது.

அமைச்சின் அபார செயல் திறனுக்காக அதன் அமைச்சர் என்ற முறையில் ங்கா கோர் மிங்கிற்கும், அமைச்சின் அதனைத்துப் பணியாளர்களுக்கும் மேன்மை தங்கிய சுல்தான், சுல்தான் நஸ்ரின் தமது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

Related News

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை