Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சிறப்பான அடைவு நிலை, அமைச்சர் ங்கா கோர் மிங்கிற்கு பேரா சுல்தான் பாராட்டு வாழ்த்து

Share:

கோலாலம்பூர், பிப்.28-

மேன்மை தங்கிய பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் முய்ஸுடின் ஷாவை வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங், கோலாலம்பூரில் உள்ள இஸ்தானா பேரா சங்காட் அரண்மனையில் நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது, வீடமைப்பு, ஊராட்சித்துறையின் 2024 ஆம் ஆண்டிற்கான அறிக்கையை பேரா சுல்தானிடம், அமைச்சர் ங்கா கோர் மிங் வழங்கினார்.

அந்த அறிக்கை, 2024 ஆம் ஆண்டுக்கான வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சின் செயல் நடவடிக்கைக்கான அடைவு நிலையின் வெற்றிகளைக் கோடிட்டுக் காட்டியது.

குறிப்பாக வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு, முதல் முறையாக தேசிய மேம்பாட்டு விருதை வென்றது உட்பட அந்த அமைச்சின் செயல்பாட்டுத் திறனை வெளிப்படுத்தியது.

அமைச்சின் அபார செயல் திறனுக்காக அதன் அமைச்சர் என்ற முறையில் ங்கா கோர் மிங்கிற்கும், அமைச்சின் அதனைத்துப் பணியாளர்களுக்கும் மேன்மை தங்கிய சுல்தான், சுல்தான் நஸ்ரின் தமது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு