சூங்ஙை லாங்ஙாட் நீர் சுத்திகரிப்பு மையத்தில் நீரில் தூய்மைக்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசத் தொடங்கியதைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை முதல் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்ட சிலாங்கூர், கோலாலம்பூர் ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் இன்று காலையில் வழக்க நிலைக்கு திரும்பியது.
நீர் கட்டம் கட்டமாக திறந்து விடப்பட்டு, நீர் விநியோக இடையூறு முழுமையாக சீரடைந்துள்ளதாக சிலாங்கூர் மாநில நீர் நிர்வாக வாரியமான ஆயிர் சிலாங்கூர் அறிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் நீர் திறந்து விடப்பட்டதால் எல்லா பகுதிகளிலும் நீர் தடை அகன்றுள்ளது என்று ஆயிர் சிலாங்கூர் குறிப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக சற்று பொறுமை காத்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஆயிர் சிலாங்கூர் தனது நன்றியை பதிவு செய்துள்ளது.







