May 6, 2026
Thisaigal NewsYouTube
மலாக்காவில் மூன்று இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்கள் மீது கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

மலாக்காவில் மூன்று இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்கள் மீது கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட வேண்டும்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.04-

கடந்த மாதம் நவம்பர் மலாக்கா, டுரியான் துங்காலில் மூன்று இந்திய இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்கள் மீது குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டும் என்று வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் இன்று வலியுறுத்தியுள்ளார்.

அந்த மூன்று இந்திய இளைஞர்களையும் போலீசார் சுட்டுக் கொல்வதற்கு 10 நிமிடத்திற்கு முன்பு என்ன நடந்தது என்பதற்கான ஆதாரங்களைத் தாங்கள் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது முழுக்க முழுக்க மரணத் தண்டனை நிறைவேற்றும் தன்மையில் அமைந்த கொலையாகும் என்பதற்கு தங்கள் வசம் உள்ள ஆடியோ விவரிக்கிறது என்று ராஜேஸ் தெரிவித்தார்.

எனவே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ள போலீஸ்கார்கள் மீது குற்றவியல் சட்டம் 302 பாய வேண்டும் என்று ராஜேஸ் வலியுறுத்தினார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 21 வயது எம். புஷ்பநாதன், 24 வயது T. புவனேஸ்வரன் மற்றும் 29 வயது ஜி. லோகேஸ்வரன் ஆகியோர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அந்த மூவரும் பாராங்கினால் போலீசாரைத் தாக்க வந்ததால் அவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர் என்று மலாக்கா மாநில போலீஸ் தலைவர் ஸுல்கைரி முக்தார் தெரிவித்து இருந்தார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்