உள்துறை அமைச்சின் குத்தகைகளைப் பெற்று தருவதற்காக சக தொழில் அதிபரிடம் ஒரு கோடியே 50 லட்சம் வெள்ளி பெற்றதாக டத்தோஸ்ரீ அந்தஸ்தை தாங்கிய தொழில் அதிபர் ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
சிம் தோ சியம் என்ற அந்த தொழில் அதிபருக்கு எதிராக மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். 4 குற்றச்சாட்டுகளைக் கொண்டு வந்துள்ளது. பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியின் போது உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த டத்தோஸ்ரீ ஹம்ஸா ஜைனுதீடமிருந்து குத்தகைகளைப் பெறுவதற்காக ஒரு கோடியே 50 லட்சம் வெள்ளி லஞ்சம் பெற்றதாக 63 வயதான அந்த தொழில் அதிபருக்கு எதிராக 4 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் அந்த தொழில் அதிபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்


