உள்துறை அமைச்சின் குத்தகைகளைப் பெற்று தருவதற்காக சக தொழில் அதிபரிடம் ஒரு கோடியே 50 லட்சம் வெள்ளி பெற்றதாக டத்தோஸ்ரீ அந்தஸ்தை தாங்கிய தொழில் அதிபர் ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
சிம் தோ சியம் என்ற அந்த தொழில் அதிபருக்கு எதிராக மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். 4 குற்றச்சாட்டுகளைக் கொண்டு வந்துள்ளது. பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியின் போது உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த டத்தோஸ்ரீ ஹம்ஸா ஜைனுதீடமிருந்து குத்தகைகளைப் பெறுவதற்காக ஒரு கோடியே 50 லட்சம் வெள்ளி லஞ்சம் பெற்றதாக 63 வயதான அந்த தொழில் அதிபருக்கு எதிராக 4 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் அந்த தொழில் அதிபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


