Jan 21, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் பள்ளிகளுக்கான நில வரி  ஆண்டுக்கு 50  ரிங்கிட்
தற்போதைய செய்திகள்

பினாங்கில் பள்ளிகளுக்கான நில வரி ஆண்டுக்கு 50 ரிங்கிட்

Share:

ஜார்ஜ்டவுன், ஜனவரி.21-

பினாங்கு மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கான நில வரியை ஒரு நிலப்பட்டாவிற்கு வெறும் 50 ரிங்கிட் என தரப்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் சோவ் கோன் யோவ் இன்று அறிவித்தார்.

அனைத்துலகப் பள்ளிகளைத் தவிர்த்து, அரசு சார்ந்த அமைப்புகளுக்குச் சொந்தமான அல்லது பள்ளிகளுக்கே நேரடியாகச் சொந்தமான அனைத்து நிலங்களுக்கும் இந்த 50 வெள்ளி வரி விகிதம் பொருந்தும்.

சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் உட்பட நேரடியாகப் பள்ளிகளுக்குச் சொந்தமான 201 நிலப் பத்திரங்களும் அடங்கும். இதற்கு முன் தெளிவான கொள்கை இல்லாத காரணத்தால், ஒவ்வொரு பள்ளிக்கும் வெவ்வேறு அளவிலான வரி வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது நடைமுறைக்கு வரும் இந்த புதிய விகிதம் மாநிலம் முழுவதும் சீரான தன்மையை உறுதிச் செய்யும் என்று சோவ் கோன் யோவ் விளக்கமளித்தார்.

இந்த நடவடிக்கை மாநிலத்திலுள்ள தமிழ் மற்றும் சீனப் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் நிதிச் சுமையைக் குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சோவ் கோன் யோவ் தெரிவித்தார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல்  விலையில் 2 காசு உயர்வு

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்