ஜோகூர், குளுவாங்கில் பஃபர் மீன் எனப்படும் ஊது மீனை உண்ட இரண்டாவது நபரும் உயிரிழந்தார். 84 வயதுடைய அந்த முதியவர் ஊது மீனை உண்ட பின்னர் கடந்த ஒரு வார காலமாக சுயநினைவு இழந்த நிலையில் குளுவாங் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு ப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலையில் சுயநினைவு திரும்பாமலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
கொடிய விஷத்தைக் கொண்டிருக்கலாம் என்று நம்பப்படும் ஊது மீனை, கடந்த மார்ச் 25 ஆம் தேதி சமைத்து உண்ட மூதாட்டி ஒருவர் உயிரிழந்த வேளையில் அவரின் கணவர் மிக ஆபத்தான நிலையில் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், அந்த முதியவரும் இன்று உயிரிழந்துள்ளார். ஆஸ்துமாவை குணப்படுத்த வல்ல ஒரு வகையான திரவம் அந்த ஊதுமீனில் இருப்பதாக நம்பி, அதனை சமூக வலைத்தளங்களில் வாயிலாக முன் உறுதி செய்து, பெற்று அந்த தம்பதியர் சமைத்து உண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


