Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ஊது மீனை உண்ட இரண்டாவது நபர் மரணம்
தற்போதைய செய்திகள்

ஊது மீனை உண்ட இரண்டாவது நபர் மரணம்

Share:

ஜோகூர், குளுவாங்கில் பஃபர் மீன் எனப்படும் ஊது மீனை உண்ட இரண்டாவது நபரும் உயிரிழந்தார். 84 வயதுடைய அந்த முதியவர் ஊது மீனை உண்ட பின்னர் கடந்த ஒரு வார காலமாக சுயநினைவு இழந்த நிலையில் குளுவாங் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு ப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலையில் சுயநினைவு திரும்பாமலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
கொடிய விஷத்தைக் கொண்டிருக்கலாம் என்று நம்பப்படும் ஊது மீனை, கடந்த மார்ச் 25 ஆம் தேதி சமைத்து உண்ட மூதாட்டி ஒருவர் உயிரிழந்த வேளையில் அவரின் கணவர் மிக ஆபத்தான நிலையில் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், அந்த முதியவரும் இன்று உயிரிழந்துள்ளார். ஆஸ்துமாவை குணப்படுத்த வல்ல ஒரு வகையான திரவம் அந்த ஊதுமீனில் இருப்பதாக நம்பி, அதனை சமூக வலைத்தளங்களில் வாயிலாக முன் உறுதி செய்து, பெற்று அந்த தம்பதியர் சமைத்து உண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஊது மீனை உண்ட இரண்டாவது நபர் மரணம் | Thisaigal News