கோலாலம்பூர், அக்டோபர் 05-
கோலாலம்பூரில் உள்ள உறைவிடப் பள்ளி ஒன்றில் பாடகி ஒருவரின் மகன், சக மாணவர்களால் பகடிவதைக்கு ஆளாகியிருப்பதாக கூறப்படும் சம்பவம் குறத்து போலீசார் விசாரணை செய்து வருவதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர்சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட மாணவனை கீழே தள்ளி, அவனுக்கு காயம் விளைவித்தாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இதுவரையில் ஐந்து போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவனின் வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








