தனது கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற சபா மாநிலத்தில் 4 நாடாளுமன்றத் தொகுதிகளை காலி செய்யும்படி டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெர்சத்து கட்சி செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு சட்டத்துறை அலுவலகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த நான்கு தொகுதிகளும் காலி செய்யப்பட்டு விட்டன என்று மக்களவை சபா நாயகர் அறிவிக்க வேண்டும் என்று சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்பட்டுள்ள கடிதத்தில் பெர்சத்து கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. பாபார், பத்து சாபி, ரனாவ் மற்றும் சிபிதாங் ஆகியவையே அந்த நான்கு தொகுதிகளாகும். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் அந்த 4 தொகுதிகள் தொடர்பில் தனது நிலைப்பாட்டை சட்டத்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.

Related News

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்

பெருநாள் காலத்தில் தட்டுப்பாடின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் -பதற்றமடைந்து பொருட்களை வாங்க வேண்டாம்

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது


