தனது கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற சபா மாநிலத்தில் 4 நாடாளுமன்றத் தொகுதிகளை காலி செய்யும்படி டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெர்சத்து கட்சி செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு சட்டத்துறை அலுவலகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த நான்கு தொகுதிகளும் காலி செய்யப்பட்டு விட்டன என்று மக்களவை சபா நாயகர் அறிவிக்க வேண்டும் என்று சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்பட்டுள்ள கடிதத்தில் பெர்சத்து கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. பாபார், பத்து சாபி, ரனாவ் மற்றும் சிபிதாங் ஆகியவையே அந்த நான்கு தொகுதிகளாகும். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் அந்த 4 தொகுதிகள் தொடர்பில் தனது நிலைப்பாட்டை சட்டத்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


