SUKE எனப்படும் சுங்கை பெசி - உளு கெலாங் அடுக்கு நெடுஞ்சாலை திறக்கப்பட்டது மூலம் கோலாலம்பூருக்கும் ஷா ஆலாமிற்கும் இடையில் வாகனப் பயண நேரம் 30 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது.
வாகன நெரிசல் மிகுந்த உச்சக்கட்ட நேரத்தில்கூட பயண நேரம் கிட்டத்தட்ட 30 நிமிடமாக இருப்பதாக பெரும்பாலான வாகனமோட்டிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
51 வயது வர்த்தகர் சுலைமான் ஷரிப் கூறுகையில் ஒவ்வொரு நாளும் ஷா ஆலாமில் உள்ள தமது அலுவலகத்திற்கு செல்வதற்கு முன்னதாக கோலாலம்பூரில் வேலை பணியாற்றும் தமது மனைவியை அவரின் பணி மனையில் இறக்கி விடுவதாக குறிப்பிடுகிறார். கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஷா ஆலாமில் உள்ள தமது அலுவலகத்தை சென்றடைய குறைந்த பட்சம் ஒன்றரை மணி நேரம் செலவாகும். ஆனால், SUKE நெடுஞ்சாலை திறக்கப்பட்ட பின்னர் பயணம் நேரம் 30 நிமிடமாக சுருங்கி விட்டதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


