SUKE எனப்படும் சுங்கை பெசி - உளு கெலாங் அடுக்கு நெடுஞ்சாலை திறக்கப்பட்டது மூலம் கோலாலம்பூருக்கும் ஷா ஆலாமிற்கும் இடையில் வாகனப் பயண நேரம் 30 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது.
வாகன நெரிசல் மிகுந்த உச்சக்கட்ட நேரத்தில்கூட பயண நேரம் கிட்டத்தட்ட 30 நிமிடமாக இருப்பதாக பெரும்பாலான வாகனமோட்டிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
51 வயது வர்த்தகர் சுலைமான் ஷரிப் கூறுகையில் ஒவ்வொரு நாளும் ஷா ஆலாமில் உள்ள தமது அலுவலகத்திற்கு செல்வதற்கு முன்னதாக கோலாலம்பூரில் வேலை பணியாற்றும் தமது மனைவியை அவரின் பணி மனையில் இறக்கி விடுவதாக குறிப்பிடுகிறார். கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஷா ஆலாமில் உள்ள தமது அலுவலகத்தை சென்றடைய குறைந்த பட்சம் ஒன்றரை மணி நேரம் செலவாகும். ஆனால், SUKE நெடுஞ்சாலை திறக்கப்பட்ட பின்னர் பயணம் நேரம் 30 நிமிடமாக சுருங்கி விட்டதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Related News

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட் இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்


