சந்தையில் உள்நாட்டு அரிசி விநியாகத் தட்டுப்பாட்டுப் பிரச்னைக்கு குறுகிய காலத்தில் தீர்வு காண முடியாது என்று பூமிபுத்தரா சில்லரை வியாபாரிகள் சங்கத்தின் தலைவரும், மைடீன் பேரங்காடி மையத்தின் நிர்வாக இயக்கநருமான டத்தோ அமீர் அலி மைடீன் தெரிவித்துள்ளார்.
அரிசி நடப்பு பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு காண்பதை விட ரஹ்மா அரிசி விற்பனையில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்துவதால் நடப்பு பிரச்னையை குறுகிய காலத்தில் தீர்வு காண இயலாது என்று அமீர் அலி மைடீன் குறிப்பிட்டார்.
அரிசி பற்றாக்குறைக்கு தீர்வு காண்பதற்கு ஒரு முழுமையாக செயல் திட்டம் தேவை. ஆனால் அந்த முழுமையான செயல் திட்டம் பற்றி இதுவரையில் சிந்திக்கப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.








