பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நடத்த விருக்கும், ஹரி ராயா மடானி மலேசியா திறந்த இல்ல பொது உபசரிப்பு, நாளை ஏப்ரல் 29 ஆம் தேதி சனிக்கிழமை அலோர் ஸ்டாரில் நடைபெற விருக்கிறது.
இந்தப் பொது உபசரிப்பில் மேன்மை தங்கிய கெடா சுல்தான், சுல்தான் சல்லேஹுதீன் சுல்தான் பத்லிஷா கலந்துகொள்ளவிருக்கிறார்.
அரச சடங்குகளுக்கு அப்பாற்பட்ட நிலையில், பொது மக்களுடனான இந்தப் பொது உபசரிப்பில் கலந்துகொள்வதற்கு கெடா சுல்தான் இணக்கம் தெரிவித்திருப்பது குறித்து, தொடர்புத் துறை மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃபாமி ஃபட்ஸில் தமது நன்றியைப் பதிவு செய்துள்ளார்.
இந்த விருந்து உபசரிப்பு அலோர் ஸ்டார், ஹோட்டல் ரையா வில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவிருக்கிறது.

Related News

குடியுரிமை பெற்றிருப்பது மட்டுமே ஒருவரின் தேசிய அடையாளத்தை நிரூபிக்காது: ஜசெகவின் 'Anak Malaysia' கருத்திற்கு பாஸ் கடும் விமர்சனம்

அரசாங்கம் மாறினால் சிபு பாலத் திட்டம் பாதிக்கப்படும் – சரவாக் முதல்வர் எச்சரிக்கைநான்

அமலாக்க அதிகாரி மீது தாக்குதல்: ஈப்போ மாநகராட்சி கடும் கண்டனம்

கங்காரில் மூட்டைக்குள் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு

சபாவில் வெள்ளம்: 5,500-க்கும் மேற்பட்ட வீடுகள், வணிக வளாகங்களில் குடிநீர் விநியோகம் பாதிப்பு


