May 18, 2026
Thisaigal NewsYouTube
தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தினால், ஈரான் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தத் தயார்
தற்போதைய செய்திகள்

தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தினால், ஈரான் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தத் தயார்

Share:

கோலாலம்பூர், ஜூன்.24-

பாலஸ்தீனம் மற்றும் ஈரானின் இறையாண்மைக் கொண்ட பிரதேசங்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தினால், தனது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி, அமைதிப் பேச்சு வார்த்தையில் ஈடுபட ஈரான் தயாராக உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் தொடர்பில் அண்மைய நிலவரங்கள் குறித்து பிரதமர் அன்வாருடன் தொலைபேசியில் உரையாடிய ஈரான் அதிபர் மசூத் பெஸெஷ்கியான், இந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.

"பாலஸ்தீனம் மற்றும் ஈரானின் இறையாண்மை கொண்ட பிரதேசங்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், ஈரான் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி அமைதியை வரவேற்கத் தயாராக உள்ளது என்பதை அதிபர் மசூத் உறுதி தெரிவித்துள்ளதாக அன்வார் குறிப்பிட்டார்.

"இந்த நிலைப்பாட்டை மற்ற இஸ்லாமிய நாடுகளுக்குத் தெரிவிக்கும்படி அவர் தம்மை கேட்டுக் கொண்டுள்ளதாக அன்வார் தெரிவித்தார்.

காஸா மற்றும் ஈரான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களைக் கண்டிப்பதில் மலேசியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக அன்வார் குறிப்பிட்டார்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை